UA-201587855-1 Tamil369news மாணவர்கள் மற்றும் மாநில நலனுக்கு ஆபத்தானது; ‘நீட்’ பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம் அனுப்புங்கள்: மாணவர்கள், பெற்றோருக்கு நடிகர் சூர்யா, இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள்

மாணவர்கள் மற்றும் மாநில நலனுக்கு ஆபத்தானது; ‘நீட்’ பாதிப்பு குறித்து ஏ.கே.ராஜன் குழுவுக்கு கடிதம் அனுப்புங்கள்: மாணவர்கள், பெற்றோருக்கு நடிகர் சூர்யா, இயக்குநர் தங்கர் பச்சான் வேண்டுகோள்

மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை. நீீட்தேர்வு எதிர்ப்புக்கான காரணங்களை நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு மாணவர்கள், பெற்றோர் அனுப்ப வேண்டும் என்று நடிகர்சூர்யா, இயக்குநர் தங்கர் பச்சான் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

நடிகர் சூர்யா: ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியை தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூக நீதிக்கு எதிரானது. 12 ஆண்டுகள் பள்ளிக்கல்வி படித்த பிறகும் நுழைவுத் தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களை பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி. அது ஏற்படுத்திய காயத்தின் வடுக்கள் காலத்துக்கும் மறையாது. மாணவர் நலனுக்கும் மாநில நலனுக்கும் நீட் போன்றதேர்வுகள் ஆபத்தானவை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை