UA-201587855-1 Tamil369news விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய நம்பிக்கை

விளையாட்டாய் சில கதைகள்: இந்தியாவின் புதிய நம்பிக்கை

டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் புதிய நம்பிக்கையாக விளங்கும் மணிகா பத்ராவின் பிறந்தநாள் இன்று (ஜூன் 15).

1995-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த மணிகா பத்ரா, தனது 5 வயது முதல் டேபிள் டென்னிஸ் போட்டியில் பயிற்சி பெற்று வருகிறார். தனது மூத்த சகோதரிகள் இருவர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆடுவதைப் பார்த்துதான் மணிகா முதலில் டேபிள் டென்னிஸ் ஆட வந்துள்ளார். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் இருவரையும் விட மிகச் சிறந்த வீராங்கனையாக அவர் உருவெடுத்துள்ளார். ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த உள்ளூர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்துவந்த மணிகா பத்ரா, தனது 15-வது வயதிலேயே தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றார். டேபிள் டென்னிஸ் போட்டிக்காக ஒரு கட்டத்தில் தனது கல்லூரிப் படிப்பையே தியாகம் செய்துள்ளார் மணிகா.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை