UA-201587855-1 Tamil369news IPL 2022 | மஹீஸ் தீக்சனா, ஜடேஜா சுழலில் வீழ்ந்த பெங்களூரு - நடப்பு சீசனில் சென்னை அணி முதல் வெற்றி

IPL 2022 | மஹீஸ் தீக்சனா, ஜடேஜா சுழலில் வீழ்ந்த பெங்களூரு - நடப்பு சீசனில் சென்னை அணி முதல் வெற்றி

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளது.

217 என்ற மெகா இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. கடந்த போட்டியில் சிறப்பான ஓப்பனிங்கை கொடுத்த பாப் டூ பிளஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் இணை இந்த முறை சோபிக்க தவறியது. மூன்றாவது ஓவரிலேயே இவர்கள் கூட்டணியை பிரித்தார் சென்னை அணியின் மிஸ்டரி ஆயுதம் மஹீஸ் தீக்சனா. 8 ரன்கள் எடுத்திருந்த டூ பிளஸ்சிஸ் பந்தை தூக்கி அடிக்க முயன்று ஜோர்டனிடம் கேட்ச் ஆகினார். இதன்பின் வந்த கோலி, ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அவரை முகேஷ் சவுத்ரி அவுட் ஆக்கி வெளியேற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை