UA-201587855-1 Tamil369news IPL 2022 | ஓப்பனிங் ஜோடியின் போராட்டம் வீண் - கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

IPL 2022 | ஓப்பனிங் ஜோடியின் போராட்டம் வீண் - கடைசி பந்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி

குஜராத் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாவது வெற்றியை இந்த ஐபிஎல் சீசனில் பதிவு செய்துள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் இறங்கிய மும்பை அணிக்கு இம்முறை ஓப்பனிங் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. ரோஹித் சர்மா அதிரடியாக இன்னிங்ஸை தொடங்கியதுடன் பவர் பிளேயில் குஜராத் பந்துவீச்சை சிதறடித்தார். அதேபோல் இஷான் கிஷானும் தன் பங்கிற்கு அதிரடியாக ஆடினார். ரோஹித் 43 ரன்களும், இஷான் கிஷன் 45 ரன்களும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டிம் டேவிட் 44 ரன்களும் எடுக்க மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரஷீத் கான் இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை