UA-201587855-1 Tamil369news இலங்கை | பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் பசியாற டீ, பன் பரிமாறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

இலங்கை | பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் பசியாற டீ, பன் பரிமாறும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

கொழும்பு: இலங்கையில் தங்கள் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தேநீர் மற்றும் பன் கொடுத்து உபசரித்துள்ளார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரோஷன் மஹாநமா.

தீவு தேசமான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது அந்த தேசம். அந்த நாடு விடுதலை பெற்ற காலத்திலிருந்து இது போன்றதொரு நெருக்கடியை எதிர்கொண்டது இல்லை என சொல்லப்பட்டுள்ளது. அதன் காரணமாக இலங்கையில் பெட்ரோல் போன்ற எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு 400 ரூபாய்க்கு மேல் விற்பைன செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு நிறுவனங்கள் மற்றும் கல்விக் கூடங்களுக்கு இரண்டு வார காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை