UA-201587855-1 Tamil369news நம்பி நாராயணன் தமிழர் என்பது பலருக்கு தெரியாது - 'ராக்கெட்ரி' விழாவில் மாதவன் உணர்ச்சிவசம்

நம்பி நாராயணன் தமிழர் என்பது பலருக்கு தெரியாது - 'ராக்கெட்ரி' விழாவில் மாதவன் உணர்ச்சிவசம்

நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் பான்-இந்தியன் திரைப்படமான ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இப்படம் ஏற்கனவே உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படம் ஜூலை 1 முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

படம் தொடர்பாக நடிகர் மாதவன் பத்திரிகையாளர்களையும் ஊடகத் துறையினரையும் சந்தித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விழாவில் மாதவன் பேசும்போது, " 'விக்ரம் வேதா' படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார். பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை