UA-201587855-1 Tamil369news “சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமாவே எனது உயிர்” - 'கோப்ரா' பட விழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்

“சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமாவே எனது உயிர்” - 'கோப்ரா' பட விழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குநர் பாலாவின் 'சேது' தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் ஒருநாள் சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவின.

இந்த வதந்திகள் குறித்து இன்று விக்ரம் நீண்ட விளக்கம் அளித்தார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய விக்ரம் தனது உடல்நலம் குறித்த வதந்திகள் தொடர்பாகவும் பேசினார். அதில், "எவ்வளவோ பாத்துவிட்டோம். இதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதால் வதந்திகள் பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது. 20 வயது இருக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது எனது காலை இழக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால் அதில் இருந்தும் நான் மீண்டு வந்தேன். எனவே அதை பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை