UA-201587855-1 Tamil369news விம்பிள்டன் | காயத்தால் அவதி - அரையிறுதியில் இருந்து விலகிய நடால்

விம்பிள்டன் | காயத்தால் அவதி - அரையிறுதியில் இருந்து விலகிய நடால்

லண்டன்: நடப்பு விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டியில் விலகியுள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர் ரபேல் நடால். காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், அதில் இருந்து மீளாத நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக, காலிறுதியில் அவர் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்த போட்டியில் நடால் 3-6, 7-5, 3-6, 7-5, 7(10)-6(4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் உடல் உபாதையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் ஆட்டத்தில் இருந்து விலகும்படி அவரது அணியினர் வற்புறுத்தியதை போட்டி முடிந்ததும் வெளிப்படுத்தி இருந்தார் நடால். அதேபோல், "நான் அரையிறுதியில் விளையாடுவேனா என தெரியவில்லை" என்றும் பேசியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை