UA-201587855-1 Tamil369news “மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்போம்” - சிறை தண்டனை குறித்து இயக்குநர் லிங்குசாமி

“மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்போம்” - சிறை தண்டனை குறித்து இயக்குநர் லிங்குசாமி

"எண்ணி ஏழு நாள்" என்ற படத்திற்காக பெற்ற கடனை திரும்பச் செலுத்தாத விவகாரத்தில், பிவிபி கேப்பிட்டல்ஸ் நிதி நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தநிலையில் லிங்குசாமி தரப்பில், இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லிங்குசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்னைப் பற்றிய செய்திக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. இந்த வழக்கு பிவிபி கேப்பிட்டல்ஸ் மற்றும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனங்கள் இடையிலானது. அவர்கள் தொடுத்த வழக்கில் மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கை உடனடியாக மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை