UA-201587855-1 Tamil369news மக்களுக்கு பிடிக்கும் நல்ல படங்களில் இனி நடிப்பேன் - விஜய் தேவரகொண்டா உறுதி

மக்களுக்கு பிடிக்கும் நல்ல படங்களில் இனி நடிப்பேன் - விஜய் தேவரகொண்டா உறுதி

தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் இவர் சமீபத்தில் நடித்த படம் 'லைகர்'. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் ரூ.125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 'லைகர்' வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் முதல்நாள் வசூலாக உலகம் முழுவதும் படம் ரூ.33.12 கோடி ரூபாயை வசூலித்ததாக படத்தை தயாரித்த தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வசூல் எண்ணிக்கை கடுமையாக சரிந்து விஜய் தேவரகொண்டா கரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. படத்தின் வெளியீட்டின் முன்பு ‘லைகர் படத்தை புறக்கணியுங்கள்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டானபோது, ‘யார் தடுக்கிறார்கள் என்று பார்க்கலாம்’ என்று விஜய் தேவரகொண்டா பேசியது, அதற்கு தியேட்டர் அதிபர் ஒருவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது எனப் பல சர்ச்சைகள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை