UA-201587855-1 Tamil369news பனாரஸ்: திரை விமர்சனம்

பனாரஸ்: திரை விமர்சனம்

வாழ்க்கையைக் கொண்டாட்டமாக அணுகும் சித்தார்த் (ஜையீத்), செல்வந்தரின் மகன். பெற்றோரை இழந்த தனி (சோனால்) எதையும் எளிதில் நம்பிவிடும் மனம் கொண்டவள். சவாலில் ஜெயிப்பதற்காக சித்தார்த் செய்யும் தவறு, ஊரை விட்டு செல்லும் அளவுக்குத் தனியைப்பாதிக்கிறது. தவறை உணரும் சித்தார்த்,அதற்குப் பிராயச்சித்தம் செய்ய தனியைத் தேடி, பனாரஸ் செல்கிறான். அவளைச் சந்தித்தானா? அவள், அவனை மன்னித்தாளா? அங்கே சித்தார்த் உணர்ந்துகொண்டது என்ன என்பது கதை.

‘நானொரு காலப் பயணி. எதிர்காலத்தில் இருந்து உன்னைச் சந்திக்க வந்திருக்கிறேன்’ என்று கூறி சித்தார்த், தனியை நம்ப வைக்கும் காட்சியுடன் சுவாரசியமாகவே தொடங்குகிறது படம். பனாரஸ் நகரத்துக்குக் கதை நகர்ந்ததும், அங்கே சாம்பு (சுஜய்) என்கிற ‘மரண’ ஒளிப்படக் கலைஞன் உதவியுடன் சித்தார்த், தனியைக் கண்டுபிடிக்கும் காட்சிகளும், அவளுடனான சந்திப்புகளும், பனாரஸின் ஆன்மிக அழகும் கவிதைபோல் ஈர்க்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை