UA-201587855-1 Tamil369news FIFA WC 2022 | 80 சதவீத நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து

FIFA WC 2022 | 80 சதவீத நேரம் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து

தோகா: கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ‘பி’-ல் நேற்று கலீபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து 6-2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.

9-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஃப்ரீ கிக் கிடைத்தது. இதில் டிரிப்பியர் உதைத்த பந்தை ஹாரி கேன் பெற்று ஹாரி மாகுவேருக்கு கிராஸ் செய்தார். அதை அவர், இலக்கை நோக்கி உத்தைத்தார். ஆனால் கோல் கம்பத்தின் அருகே பந்தை பெற இங்கிலாந்து வீரர்கள் யாரும் இல்லாததால் வாய்ப்பு வீணானது. தொடர்ந்து 28, 30, 32-வது நிமிடங்களில் இங்கிலாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை