UA-201587855-1 Tamil369news டி20 கேப்டனாக மீண்டும் ஹர்திக் பாண்டியா: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

டி20 கேப்டனாக மீண்டும் ஹர்திக் பாண்டியா: இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியாவில் இந்திய அணி விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான இந்திய அணி வீரர்களின் விவரங்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, சமீபத்தில் வங்கதேச தொடரில் கட்டைவிரல் காயத்தால் விளையாடாமல் இருந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் அணியை வழிநடத்த உள்ளார். என்றாலும் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டித் தொடருக்கே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10-ம் தேதி கவுகாத்தியில் தொடங்குகிறது. கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் மைதானங்களில் மீதமுள்ள இரு போட்டிகளில் நடக்கவுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை