UA-201587855-1 Tamil369news ஹாலிவுட் செல்லும் ஆலியா பட் - குழந்தையைக் கவனிக்கும் ரன்பீர் கபூர்

ஹாலிவுட் செல்லும் ஆலியா பட் - குழந்தையைக் கவனிக்கும் ரன்பீர் கபூர்

பாலிவுட் நடிகர்களான ரன்பீர்க பூரும், ஆலியா பட்டும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா.

இந்நிலையில், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஹா என்று பெயர் சூட்டினர். குழந்தை பிறந்ததை அடுத்து ஆலியா பட் மீண்டும் சினிமாவுக்கு திரும்ப உள்ளார். முதல்கட்டமாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். ஆலியா ஹாலிவுட் செல்லவிருப்பதால், குழந்தையை ரன்பீர் கவனிக்க உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை