UA-201587855-1 Tamil369news ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது.

'செத்தும் ஆயிரம் பொன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இதில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை