UA-201587855-1 Tamil369news இளையராஜாவுடன் இசையிரவு 24 | ‘பூவே இளைய பூவே...’ - அவளின் இரு விழி கடலில் படகாகிறது மனது!

இளையராஜாவுடன் இசையிரவு 24 | ‘பூவே இளைய பூவே...’ - அவளின் இரு விழி கடலில் படகாகிறது மனது!

இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் பெரும்பாலானவை பாடல் கேட்பவர்களின் மனதுக்கு ஆறுதல் அளிப்பவை. அவரது பல பாடல்களை எந்தச் சூழலில் கேட்டாலும் மனதோடு இழையோடும் தன்மைக் கொண்டவை. அத்தருணங்களில் ராஜாவின் இசைகேற்ப காற்று வீசும் திசையெங்கும் சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் எடையைவிட லேசாகிவிடும் மனது. அதுபோன்ற அற்புதங்களை தனது நிகரற்ற இசையால் மீண்டும் மீண்டும் செய்து கொண்டேயிருப்பவர் இளையராஜா என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

திரைப்படங்களில் அதிகபட்சம் ஒரு 5 நிமிடம் வரக்கூடியவையே பாடல்கள். அதை காலங்கடந்து தலைமுறைகள் தாண்டி ரசிக்க வைக்க அசாத்தியத்துடன் கூடிய பிரமிக்கத்தக்க இசை ஞானமும், செறிவும் தேவை என்பதை இசைஞானி தனது ஒவ்வொரு பாடலிலும் நிகழ்த்திக் காட்டியிருப்பார். குறைவான வசதிகள், திறமையான இசை கலைஞர்களை வைத்துக்கொண்டு இளையராஜா உருவாக்கியிருக்கும் பாடல்கள் அனைத்துமே அவரது பாடலைக் கேட்பவர்களின் ஜீவனில் ஜீவித்திருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை