UA-201587855-1 Tamil369news ‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்

‘சினிமாவில் மீண்டும் எனக்கு வாழ்க்கை கொடுத்ததற்கு நன்றி’ - ‘பதான்’ விழாவில் ஷாருக்கான் உருக்கம்

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் ஐந்து நாட்களில் 543 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்து வருகிறது. படத்துக்கான வரவேற்பு அதிகமாகி வரும் நிலையில் ஷாருக் கான் உள்ளிட்ட படக்குழுவினர் வெற்றிவிழா கொண்டாடினர். பின்னர் படத்தின் வெற்றி குறித்து ஊடகங்களிடம் பேசிய ஷாருக் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை