UA-201587855-1 Tamil369news “3 நாட்களுக்குள் போட்டி முடிவடையும் என எதிர்பார்க்கவில்லை” - நாக்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து ரோஹித் சர்மா

“3 நாட்களுக்குள் போட்டி முடிவடையும் என எதிர்பார்க்கவில்லை” - நாக்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து ரோஹித் சர்மா

நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார். நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஷ் லபுஷேன் 49, ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 5, அஸ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 114 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 23, சேதேஷ்வர் புஜாரா 7, விராட் கோலி 12, சூர்யகுமார் யாதவ் 8, ரோஹித் சர்மா 120, கர் பரத் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். ரவீந்திர ஜடேஜா 66, அக்சர் படேல் 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை