UA-201587855-1 Tamil369news EFL கோப்பை | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்

EFL கோப்பை | ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் யுனைடெட்

லண்டன்: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கால்பந்தாட்ட அணிகள் பங்கேற்று விளையாடும் EFL கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மான்செஸ்டர் யுனைடெட் அணி. இந்த தொடர் ஸ்பான்ஸர்ஷிப் காரணமாக Carabao Cup என இப்போது அறியப்படுகிறது.

லண்டனில் உள்ள வெம்ப்லி மைதானத்தில் நியூகேஸ்டல் யுனைடெட் அணிக்கு எதிரான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இந்த தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வெல்லும் ஆறாவது சாம்பியன் பட்டம் அது. கடைசியாக 2016-17 சீசனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது அந்த அணி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை