UA-201587855-1 Tamil369news NEP vs UAE | மரத்தில் ஏறி போட்டியை கண்டுகளித்த நேபாள கிரிக்கெட் ரசிகர்கள்

NEP vs UAE | மரத்தில் ஏறி போட்டியை கண்டுகளித்த நேபாள கிரிக்கெட் ரசிகர்கள்

கிர்திபூர்: நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி கிர்திபூர் பகுதியில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண ஒரே நேரத்தில் பல்லாயிர கணக்கான ரசிகர்கள் மைதானத்துக்கு வந்திருந்தனர். மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி இருந்த காரணத்தால் போட்டியை காணும் ஆவலில் மரத்தின் உச்சியில் ஏறி போட்டியை சில ரசிகர்கள் பார்த்திருந்தனர். இந்தப் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரக அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்தது அந்த அணி. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் டிஎல்எஸ் முறையில் ஆட்டம் 44 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 261 ரன்கள் நேபாள அணிக்கான இலக்கு. 269 ரன்கள் எடுத்து அந்த அணி வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை