UA-201587855-1 Tamil369news ‘இம்பாக்ட் பிளேயர் விதி உள்ள வரை தோனியும் விளையாடுவார்’ - பிராவோ கருத்தும் சாத்தியமும்

‘இம்பாக்ட் பிளேயர் விதி உள்ள வரை தோனியும் விளையாடுவார்’ - பிராவோ கருத்தும் சாத்தியமும்

ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்னும் 12-வது வீரரும் ஆடக்கூடிய புதிய விதிமுறை நீடிக்கும் வரை தோனி விளையாடுவார் என்று முன்னாள் சிஎஸ்கே வீரரும், இப்போதைய பந்துவீச்சுப் பயிற்சியாளரும், மே.இ.தீவுகளின் ஆல்ரவுண்டருமான டிவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.

இம்பாக்ட் பிளேயர் என்பது சாதாரணமாக விளையாடும் 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை அணிகள் அறிவிக்கலாம். இவர்களில் யாரை வேண்டுமானாலும் இம்பாக்ட் பிளேயராக இறக்கிக் கொள்ளலாம். இதனை இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் திறம்பட பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளன, ஆர்சிபி அணி கேப்டன் டுபிளெசியையே இம்பாக்ட் பிளேயராகக் களமிறங்கியதையும் பார்த்தோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை