இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலம் எதிர்பார்த்ததை விட வேகமாக மாற்றங்களுக்கு தயாராகி கொண்டிருக்கிறது அல்லது தயாராக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. அதுவும் முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட் அணி பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்திய அணி தொடர்ச்சியாக இரு முறை ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த இரு தோல்விகளும் ரோஹித் சர்மா, விராட் கோலி,புஜாரா உள்ளிட்டோர் தங்களது டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி காலக்கட்டத்தை நோக்கி பயணிப்பதை உணர்த்துவதாக உள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இரு தொடர்களுக்கான காலக்கட்டத்தில் இந்திய அணி மோசமான செயல்திறனை வெளிப்படுத்தவில்லைதான். இரு முறையும் இறுதிப் போட்டியில் கால்பதித்துள்ளது. ஆனால் தற்போது லண்டன்ஓவல் மைதானத்தில் முடிவடைந்த சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் மிகுந்த சோர்வு காணப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்