UA-201587855-1 Tamil369news ‘காவாலா’வுக்கு கிடைத்த வரவேற்பு: பாடகி ஷில்பா ராவ் மகிழ்ச்சி

‘காவாலா’வுக்கு கிடைத்த வரவேற்பு: பாடகி ஷில்பா ராவ் மகிழ்ச்சி

சென்னை: பிரபல இந்திப் பாடகி ஷில்பா ராவ். இந்தியில் ஏராளமானப் பாடல்களைப் பாடியுள்ள இவர், பெங்காலி, தெலுங்கு உட்படப் பிற மொழிகளிலும் பாடி வருகிறார். தமிழில் இவர், ‘நான் மகான் அல்ல’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையில், ‘ஒரு மாலை நேரம்’பாடலைப் பாடியுள்ளார். இப்போது ‘ஜெயிலர்’படத்துக்காக ‘காவாலா’ பாடலைப் பாடியுள்ளார்.

அனிருத் இசையில் வெளியான இந்தப் பாடலுக்கு தமன்னா, ரஜினிகாந்த் நடனம் ஆடியுள்ளனர். இந்தப் பாடல் வரவேற்பு பெற்றிருப்பது பற்றி ஷில்பா ராவ் கூறியதாவது: இது இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று நினைக்கவில்லை. இது அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஹிட்டாகி இருக்கிறது. வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. மக்களை, இசை எவ்வாறு ஒன்றிணைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இசைக்கு மொழி பிரச்சனையில்லை என்பதை இது புரிய வைக்கிறது. இசை அமைப்பாளர் அனிருத், ஒவ்வொரு வார்த்தையையும் தெளிவாகவும் சரியாகவும் உச்சரிக்கச் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இவ்வாறு ஷில்பா ராவ் தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை