UA-201587855-1 Tamil369news உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம் - தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா

உலக தடகள சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம் - தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 27-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில் இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று (19-ம் தேதி) தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் களமிறங்கும் இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 25 வயதான நீரஜ் சோப்ரா, 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம், அதே ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று அசத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை