UA-201587855-1 Tamil369news மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை வாங்கிய அடா சர்மா!

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் வீட்டை வாங்கிய அடா சர்மா!

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020-ம் ஆண்டு, மும்பை பாந்த்ராவில் உள்ள மான்ட் பிளாங் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைவு, இந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்ட வீட்டுக்கு யாரும் வாடகைக்குக் கூட வரவில்லை என்று சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது.

அந்த வீட்டை, நடிகை அடா சர்மா இப்போது வாங்கியுள்ளார். இதை அவருக்கு நெருக்கமானவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அடா சர்மாவிடம் கேட்டபோது, “எல்லாம் இறுதி செய்யப்பட்டதும் அதை மீடியாவிடம் தெரிவிப்பேன்” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை