UA-201587855-1 Tamil369news ஆஸ்திரேலியாவுடன் 2-வது டி20-ல் இன்று மோதல்: பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி

ஆஸ்திரேலியாவுடன் 2-வது டி20-ல் இன்று மோதல்: பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி

திருவனந்தபுரம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் பந்து வீச்சில் முன்னேற்றம் காணும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கக்கூடும்.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரது அதிரடியால் எளிதாக வெற்றியை நெருங்கியது. ஆனால் கடைசி 2 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து இந்திய அணி சற்று தடுமாற்றம் அடைந்தது. எனினும் ரிங்கு சிங் பதற்றம் இல்லாமல் விளையாடி அணி வெற்றிக் கோட்டை கடக்க உதவினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை