UA-201587855-1 Tamil369news 28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

28 அணிகள் கலந்துகொள்ளும் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை: 13-வது தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் சென்னையில்இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. வரும் 28-ம் தேதி வரைநடைபெறும் இந்தத் தொடரின்அனைத்து ஆட்டங்களும் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கிமைதானத்தில் நடை பெறுகிறது.மொத்தம் 28 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் சத்தீஸ்கர், குஜராத், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் தமிழ்நாடு, இமாச்சல் பிரதேசம், அசாம் அணிகளும், ‘சி’ பிரிவில் கர்நாடகா, பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ அணிகளும், ‘டி’ பிரிவில் மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தராகண்ட் அணிகளும் ‘இ’ பிரிவில் பெங்கால், மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர் ஆகிய அணிகளும், ‘எஃப்’ பிரிவில் ஜார்கண்ட், சண்டி கர், ஆந்திரா, கோவா அணிகளும், ‘ஜி’ பிரிவில் உத்தரப்பிரதேசம், புதுச்சேரி, கேரளா, ராஜஸ்தான் அணிகளும், ‘ஹெச்’ பிரிவில் டெல்லி, ஒடிசா, தெலங்கானா, அருணாச்சல பிரதேசம் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை