UA-201587855-1 Tamil369news ஐபிஎல் தொடரில் ரூ.41,500 கோடி முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம்

ஐபிஎல் தொடரில் ரூ.41,500 கோடி முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம்

புதுடெல்லி: கால்பந்து, கோல்ஃப் உள்ளிட்ட தொழில்முறை விளையாட்டுகளில் சவுதி அரேபியா தொடர்ந்து முதலீட்டை அதிகரித்து வருகிறது. அதற்கு கிடைத்த வரவேற்பினைத் தொடர்ந்து தற்போது கிரிக்கெட்டில் அதிகம் லாபம் ஈட்டும் தொடரான ஐபிஎல் பக்கம் சவுதி அரேபியாவின் கவனம் திரும்பியுள்ளது.

அதன் அடிப்படையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள் ஐபிஎல்லை 30 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து இந்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த செப்டம்பரில் சவுதி இளவரசர் இந்தியாவுக்கு வந்தபோது இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை