UA-201587855-1 Tamil369news ‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ - ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத்

‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ - ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத்

சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் 11-வது வீரராக பேட் செய்து சதம் விளாசி இருந்தார் தமிழகத்தை சேர்ந்த வித்யுத் சிவராமகிருஷ்ணன். அது குறித்த நினைவுகளை அவர் பகிர்ந்து உள்ளார்.

கடந்த 2001 சீசனில் சதம் பதிவு செய்திருந்தார் வித்யுத். தமிழ்நாடு அணிக்காக விளையாடிய அவர், டெல்லி அணிக்கு எதிராக 122 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்கள் எடுத்தார். இதில் 17 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம் ரஞ்சி கோப்பையில் 11-வது வீரராக களம் கண்டு சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை