UA-201587855-1 Tamil369news ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி

ராஜ்கோட்டில் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்தும் முனைப்பில் இந்திய அணி

ராஜ்கோட்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. கணிக்க முடியாத அணியாகவும் அச்சமின்றியும் விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதில் இருந்து மீண்டு வந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுத்து. இதனால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இந்நிலையில் 3-வது போட்டியில் இரு அணிகளும் இன்று காலை 9.30 மணிக்கு ராஜ்கோட்டில் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை