UA-201587855-1 Tamil369news ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழகம் 300 ரன்கள் குவிப்பு

ரஞ்சி கோப்பை கால் இறுதி: தமிழகம் 300 ரன்கள் குவிப்பு

கோவை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஷ்டிரா அணிக்கு எதிரானகால் இறுதி ஆட்டத்தின் 2-வதுநாளில் தமிழக அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 300 ரன்கள்குவித்து முன்னிலை பெற்றது.

கோவையில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணியானது 77.1 ஓவரில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹர்விக் தேசாய் 83 ரன்கள் எடுத்தார். தமிழக அணி தரப்பில் சாய்கிஷோர் 5, அஜித் ராம் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய தமிழக அணி முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 12, சாய் கிஷோர் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை