UA-201587855-1 Tamil369news IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப் அபார பந்துவீச்சு

IND vs ENG ராஞ்சி டெஸ்ட் | இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கு: அஸ்வின், குல்தீப் அபார பந்துவீச்சு

ராஞ்சி: இங்கிலாந்து அணிக்கெதிரான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் 2-வது இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரின் அபார பந்துவீச்சால் அந்த அணி 145 ரன்களுக்குச் சுருண்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 23-ம் தேதி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து நேற்று காலை 3-ம் நாள் ஆட்டத்தை இந்திய வீரர் துருவ் ஜுரெல் 30 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 17 ரன்களுடனும் தொடங்கினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை