UA-201587855-1 Tamil369news CSK vs RCB | முதல் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

CSK vs RCB | முதல் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை: நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிகள் விளையாடின. இதில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. ஒட்டுமொத்தமாக சிஎஸ்கே அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை இந்தப் போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர்.

கோலாகலமாக தொடங்கிய இந்த சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். கோலியுடன் இன்னிங்ஸை ஓப்பன் செய்த அவர், 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ரஜத் பட்டிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலியும், கேமரூன் கிரீனும் சின்ன பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அந்த கூட்டணியை தகர்த்தார் முஸ்தாபிசூர் ரஹ்மான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை