UA-201587855-1 Tamil369news அன்று ஏலத்தில் தவறுதலாக பஞ்சாப் கிங்ஸ் வாங்கிய ஷஷாங் சிங் இன்று மேட்ச் வின்னர்!

அன்று ஏலத்தில் தவறுதலாக பஞ்சாப் கிங்ஸ் வாங்கிய ஷஷாங் சிங் இன்று மேட்ச் வின்னர்!

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாஞ்சப் கிங்ஸ் அணி. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மேட்ச் வின்னராக ஷஷாங் சிங் ஜொலித்தார். அதன் மூலம் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் குழப்பத்துக்கு மத்தியில் ஷஷாங் சிங்கை வாங்கி இருந்தது பஞ்சாப் அணி நிர்வாகம். ஷஷாங் சிங் என்ற ஒரே பெயரில் இரண்டு வீரர்கள் ஏலத்தில் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். அதில் 32 வயதான ஷஷாங்கை பஞ்சாப் அணி, ரூ.20 லட்சத்துக்கு வாங்கி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை