UA-201587855-1 Tamil369news சூர்யகுமார் யாதவ் வருகையால் பலம் பெறுமா மும்பை இந்தியன்ஸ்? - டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்

சூர்யகுமார் யாதவ் வருகையால் பலம் பெறுமா மும்பை இந்தியன்ஸ்? - டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இன்று மோதல்

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. மும்பை அணியில் காயத்தில் இருந்து மீண்டுஉடற்தகுதி பெற்றுள்ள சூர்யகுமார் யாதவ் களமிறங்குவதால் இன்றைய ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்து புள்ளிக் கணக்கை தொடங்காமல் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயம் மற்றும் குடலிறக்க அறுவை சிகிச்சையில் இருந்துகுணமடைந்து முழு உடற்தகுதியுடன் இன்றைய ஆட்டத்தில் களறமிங்குகிறார். அவரது வருகை மும்பை அணிக்கு பலம் சேர்க்கக்கூடும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை