UA-201587855-1 Tamil369news ‘எதிரணி பவுலர்கள் மனதில் அச்சத்தை விதைக்கணும்!’ - பாட் கமின்ஸின் தாரக மந்திரம்

‘எதிரணி பவுலர்கள் மனதில் அச்சத்தை விதைக்கணும்!’ - பாட் கமின்ஸின் தாரக மந்திரம்

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிகபட்ச டி20 ஸ்கோரை இருமுறை அடித்து நொறுக்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தாரக மந்திரம், அதன் கேப்டன் பாட் கமின்ஸின் அதிரடி வேட்கைதான். அதாவது, ட்ராவிஸ் ஹெட் கூறுவது போல் பவர் ப்ளேயை அதிகபட்சம் பயன்படுத்தி, அதில் மேக்ஸிமம் ஸ்கோர் செய்து விட வேண்டும். ட்ராவிஸ் ஹெட், அய்டன் மார்க்ரம், கிளாசன், அபிஷேக் சர்மா, கடைசியில் அப்துல் சமது என்று பெரிய அதிரடி கும்பல் உள்ளது. இவர்கள் உண்மையில் எதிரணி பவுலர்களுக்கு ஒரு சிம்ம சொப்பனம்தான்.

ட்ராவிஸ் ஹெட் இதுவரை 235 ரன்களையும், அபிஷேக் சர்மா 211 ரன்களையும் முறையே 199 மற்றும் 197 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளனர். இன்னும் கொஞ்சம் முயன்றால் டி20-யில் முதல் 300 ரன்களை எடுக்கும் அணியாக சன் ரைசர்ஸ் இருக்கும். எடுக்க முடியும், அதை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்கிறார் பாட் கமின்ஸ். ஆர்சிபி அணியை அன்று அடித்து நொறுக்கிய பிறகு பாட் கமின்ஸ் ஓய்வறையில் வீரர்களிடம் கூறியதாக கசிந்த செய்தியில், ‘எதிரணி பவுலர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்பதுதான் சன் ரைசர்ஸின் கொள்கை என்று கூறியதாகத் தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை