UA-201587855-1 Tamil369news பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணிகள் தகுதி

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி: 400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு இந்திய அணிகள் தகுதி

புதுடெல்லி: பாரீஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்துக்கு இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வரும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்க இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று பஹாமாஸில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஓட்டத்தில் பங்கேற்ற இந்திய அணிகள் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டி தகுதி பெற்றுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை