UA-201587855-1 Tamil369news ரிஸ்வான், ஃபகர் ஜமான் அபாரம்: பாகிஸ்தான் பழி தீர்ப்பு வெற்றி!

ரிஸ்வான், ஃபகர் ஜமான் அபாரம்: பாகிஸ்தான் பழி தீர்ப்பு வெற்றி!

டப்ளினில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்று சமநிலை எய்தியது. இந்த முறை டாஸ் வென்று பாகிஸ்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய, அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுக்க தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 16.5 ஓவர்களில் 195/3 என்று அபார வெற்றி பெற்றது.

பந்து வீச்சில் ஷாஹின் ஷா அஃப்ரீடி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அப்பாஸ் அஃப்ரீடி 2 விக்கெட்டுகளையும் முகமது ஆமிர், நசீம் ஷா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பேட்டிங்கில் 6 ரன்களுக்கு சயீம் அயூப் விக்கெட்டைப் பறிகொடுத்ததுடன் பாபர் அசாம் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கண்டது. பாகிஸ்தான் ஆனால் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 75 ரன்களையும் பகர் ஜமான் 40 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 78 ரன்களையும் விளாச அசாம் கான் 10 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 30 ரன்கள் எடுக்க 16.5 ஓவர்களில் அயர்லாந்து கதை முடிந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை