UA-201587855-1 Tamil369news பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?- சிஎஸ்கே - ஆர்சிபி இன்று பலப்பரீட்சை

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது யார்?- சிஎஸ்கே - ஆர்சிபி இன்று பலப்பரீட்சை

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ளசின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸுடன் (சிஎஸ்கே) பலப்பரீட்சை நடத்துகிறது.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன. இந்த வரிசையில் 3-வதுஅணியாக தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் இணைந்துள்ளது. நேற்று முன்தினம் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை