UA-201587855-1 Tamil369news முதல் நாளில் 525 ரன் குவித்து இந்திய மகளிர் அணி சாதனை: இரட்டை சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தல் | மகளிர் டெஸ்ட்

முதல் நாளில் 525 ரன் குவித்து இந்திய மகளிர் அணி சாதனை: இரட்டை சதம் விளாசி ஷபாலி வர்மா அசத்தல் | மகளிர் டெஸ்ட்

சென்னை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 525 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி ரன் வேட்டையாடியது. தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பவுண்டரிகளாக விளாசினர். ஷபாலி வர்மா 113 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடனும், ஸ்மிருதி மந்தனா 122 பந்துகளில், 19 பவுண்டரிகளுடனும் சதம் விளாசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை