UA-201587855-1 Tamil369news உணவக ஊழியர்களுடன் உற்சாக செல்ஃபி எடுத்துக் கொண்ட ரன்வீர் - தீபிகா தம்பதியர்!

உணவக ஊழியர்களுடன் உற்சாக செல்ஃபி எடுத்துக் கொண்ட ரன்வீர் - தீபிகா தம்பதியர்!

மும்பை: நட்சத்திர தம்பதியரான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன், மும்பையில் உள்ள உணவக ஊழியர்களுடன் உற்சாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அந்தப் படத்தை உணவக நிர்வாகம் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.

தங்கள் குடும்பத்துடன் இரவு நேர உணவுக்கு ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் தம்பதியர் அண்மையில் வந்துள்ளனர். இந்த செல்ஃபி அப்போது தான் எடுக்கப்பட்டுள்ளது. தங்களது முதல் குழந்தையை இந்த தம்பதியர் எதிர்நோக்கி உள்ளனர். தீபிகா படுகோன் கர்ப்பம் அடைந்துள்ளது குறித்த தகவல் கடந்த பிப்ரவரியில் வெளியாகி இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை