UA-201587855-1 Tamil369news ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா | T20 WC

ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா | T20 WC

செயின்ட் லூசியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் 24 ரன்களில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ் 31, துபே 28, பாண்டியா 27 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் மட்டுமே கொடுத்து கோலியின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை