UA-201587855-1 Tamil369news எது நல்ல ஒளிப்பதிவு? - ராம்ஜி நேர்காணல்

எது நல்ல ஒளிப்பதிவு? - ராம்ஜி நேர்காணல்

சினிமா என்பது கூட்டுக் கலை. இந்தக் கலையில் இயக்குநர்களின் பார்வையை அப்படியே திரையில் கொண்டு வருவது ஒளிப்பதிவு. காட்சிகளின் தன்மையையும் நடிகர்களின் உணர்ச்சிகளையும் பிரம்மாண்டமாக திரையில் கொடுக்கும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவர், ராம்ஜி. பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம், தனி ஒருவன், ஒத்த செருப்பு உட்பட பல பேசப்பட்ட படங்களின் ஓளிப்பதிவாளர். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் பணியாற்ற இருக்கும் ராம்ஜியை, சந்தித்தோம்...

“இயக்குநர் செல்வராகவனோட தொடர்ந்து 3 படங்கள் பண்ணிட்டேன். நாலாவது படம் பண்ணப் போறேன். எங்க ரெண்டு பேருக்குள்ளயும் நல்ல புரிதல் இருக்கு. டைரக்டர் என்ன எதிர்பார்க்கிறார், அந்தக் கதைக்கு எது தேவை, அதை புரிஞ்சுகிட்டு பண்ணினாலே எல்லா இயக்குநர்கள் கூடயும் ஈசியா செட்டிலாகிடலாம். எனக்கும் செல்வாவுக்கும் அப்படியொரு நட்பு இருக்கு” என்று ஆரம்பிக்கிறார், ராம்ஜி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை