UA-201587855-1 Tamil369news வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது: 308 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி

வங்கதேச அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது: 308 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி

சென்னை: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் 102, ரவீந்திர ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 65 நிமிடங்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 91.2 ஓவர்களில் 376 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜடேஜா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காத நிலையில்தஸ்கின் அகமது பந்தில் வெளியேறினார். 7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-அஸ்வின் ஜோடி 199 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆகாஷ்தீப் 17 ரன்களில் நடையை கட்டினார். மட்டையை சுழற்றிய அஸ்வின் 133 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 113 ரன்எடுத்த நிலையில் தஸ்கின் அகமதுவீசிய பந்தை தூக்கி அடித்த போது டீப் மிட் ஆஃப் திசையில்கேட்ச் ஆனது. கடைசி வீரராகபும்ரா 7 ரன்னில் வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை