மும்பை: “பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன்” என்று இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் மும்பையை விட்டு வெளியேறிவிட்டேன். பாலிவுட் சினிமா மிகவும் டாக்சிக் ஆகிவிட்டது. திரைத் துறையினரிடமிருந்து விலகி இருக்க விரும்புகிறேன். அனைவரும் நம்பத்தகாத இலக்குகளைத் துரத்துகிறார்கள். ரூ.500 அல்லது ரூ.800 கோடி படங்களை உருவாக்கவே முயற்சிக்கிறார்கள். படைப்புச் சூழல் என்றும் முற்றிலுமாக காணாமல் போய்விட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்