UA-201587855-1 Tamil369news 'பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால்?..' - ரோகித் சர்மா ஓபன் டாக்

'பாகிஸ்தானை குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால்?..' - ரோகித் சர்மா ஓபன் டாக்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் நாளை பலப்பரீட்சை செய்ய உள்ளன. இரு அணிகளுக்கும் இதுதான் இந்தத் தொடரின் முதல் போட்டியும் கூட. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தி வரும் போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. அதன் காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டிக்கு எப்போதுமே அதீத எதிர்பார்ப்பு இருக்கும்.

வானிலை மைய ஆய்வின்படி, போட்டி நடைபெற உள்ள மெல்பேர்ன் நகரில் நாளை 80 சதவீதம் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை அச்சுறுத்தல் இருந்தாலும் வழக்கம் போலவே இந்தப் போட்டிக்கும் அந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு சுவாரஸ்யம் சேர்க்கும் வகையில் புரோமோக்களும் வலம் வந்து கொண்டுள்ளன. இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதி உள்ளன. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்த கடைசி 3 டி20 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது பாகிஸ்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை