UA-201587855-1 Tamil369news N4: திரை விமர்சனம்

N4: திரை விமர்சனம்

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் சில்லறை மீன் வியாபாரம் செய்கிறார் கண்ணாம்மா (வடிவுக்கரசி). அவர் வளர்ப்புப் பிள்ளைகளான சூர்யா (மைக்கேல் தங்கதுரை), கார்த்தி (அப்சல் ஹமீது), சௌந்தர்யா (கேப்ரில்லா), அபிநயா (வினுஷா) ஆகிய நால்வரும் அதே துறைமுகத்தை அண்டிப் பிழைக்கிறார்கள். கல்லூரி மாணவரான விஜய் (அக்‌ஷய் கமல்)
தனது நண்பர்களுடன் இத்துறைமுகத்துக்கு வந்து, மது அருந்துவது, புகைப்பது எனப் பொழுதைக் கழிக்கிறார். இப்பகுதியின், என்4 காவல் நிலையத்தில் நேர்மையும் கண்டிப்புமிக்க ஆய்வாளராக இருக்கிறார் ஃபாத்திமா (அனுபமா குமார்). ஒரு துப்பாக்கி வெடிப்புச் சம்பவம், இவர்களை ஒரு புள்ளியில் இணைக்க, அதன்பின் இக்கதாபாத்திரங்கள் சந்திக்கும் மோதல்களும் முரண்களும் எப்படி முடிவுக்கு வந்தன என்பது கதை.

ஒரு முக்கியச் சம்பவம்தான், திரைக்கதையின் போக்கைத் தீர்மானித்து, கதாபாத்திரங்களுக்கு இடையிலான உள், வெளி முரண்களை வெளிக்காட்டப் போகிறது என்றால், அதை முதல் 20 நிமிடங்களுக்குள் நிகழச் செய்வது முக்கியம். இந்தப் படத்தின் முக்கியச் சம்பவம் அழுத்தமாக இருந்தும், முதல் பாதிப் படத்தின் இறுதியில் நிகழ்வது பார்வையாளர்களின் பொறுமையைச் சோதிக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை