ஹைதராபாத்: 2019 உலகக்கோப்பையில் விஜய் சங்கர் தேர்வு குறித்த சர்ச்சை தொடர்பாக மனம்திறந்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு.
தெலுங்கு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தேர்வுக்குழு ரஹானே மாதிரியான அனுபவம் மற்றும் சீனியர் வீரர்களை தேர்வு செய்திருந்தால்கூட சரி எனலாம். ரஹானே போன்றோர் மிடில் ஆர்டர் ஸ்பெஷலிஸ்ட். ஆனால் விஜய் சங்கர் அப்படியானவர் அல்ல. எல்லோருக்கும் இந்தியா கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசைதான். அணியில் என்னை தேர்வு செய்யவில்லை என்பதற்கான காரணம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்