UA-201587855-1 Tamil369news மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்கள் இல்லையா? - டெல்லி காவல்துறை விளக்கம்

மல்யுத்த வீராங்கனைகள் விவகாரம்: பிரிஜ் பூஷனுக்கு எதிரான வழக்கில் ஆதாரங்கள் இல்லையா? - டெல்லி காவல்துறை விளக்கம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்தியை டெல்லி காவல்துறை மறுத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக்கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். இவர்களை போலீஸார் கைது செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை