UA-201587855-1 Tamil369news அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த கோவை மாணவி

அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்று சாதித்த கோவை மாணவி

கோவை: புதுடில்லியில் நடந்த அகில இந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில், கோவையைச் சேர்ந்த இளம் பெண் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். டெல்லியில் ‘கேலோஇந்தியா’ பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் என்ற தலைப்பில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள், கைப்பந்து, கூடைப்பந்து, துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் நடந்து வருகின்றன.

துப்பாக்கி சுடும் போட்டியில் கோவை பிஎஸ்ஜ ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவியும், துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிறப்புப் பயிற்சி பெற்ற வீராங்கனையுமான நிவேதிதா வி.நாயர் (21) கலந்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை